வியாழன், 1 ஜூலை, 2010

என்றும் என் நினைவில்.......................................

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
உயிர்சுவட்டில் ஓவியமாய்
உறைந்துபோய் கிடக்குதடி..............

என் காதல் மொழி பகர
உன் கண்கள் நானம் கொள்ள
மழலையாய் உனை ரசித்தேன்
மறக்கவில்லையடி இன்னும்.............

பேரூந்து தரிப்பிடத்தில்
பேர் தெரியா பலர் நடுவே-உன்
விழி பேசிய மொழி
விலகவில்லை என் கண்ணில்................

விழி பார்த்து வரி சுருக்கி
நீ பேசும் நான்கு வரி கைக்கூ
நெஞ்சினில் பதிந்த பொக்கிசமாய்
இன்னமும் இருக்குதடி.............

இறுதியாய் ஓர் நாளில்
மழலை நீ மழலையுடன்
விதி என்று விலக்கினாய்
மரணத்தின் மணித்துளிகள்
மறக்கவில்லை இன்னுமடி.................